தாய்லாந்தை புரட்டிப்போட்ட சூறாவளி; இதுவரை 7 பேர் பலி ஒருவரை காணவில்லை

தாய்லாந்து நாட்டில் டியான்மு (Dianmu) சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகளவு பெய்த மழையால் வீடுகள் மூழ்கிய நிலையில் மக்கள் மேல் கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளதுடன் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here