நேற்று 93 பேர் கோவிட்-19 தொற்று நோய்க்கு பலி; 10,833 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்

கோலாலம்பூர்: நேற்று கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி 93 பேர் இறந்ததாக சுகாதார அமைச்சு அதன் கிட்ஹப் தரவுத்தளத்தில் (GitHub database) மூலம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 16 பேர் முன்பு இறந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 27,422 ஆக உள்ளது.

பினாங்கில் 26 பேரும், சரவாக் (14), ஜோகூர் (8), கோலாலம்பூர் (7), சபா (6), கெடா, கிளந்தான் மற்றும் பஹாங் (தலா 5), மலாக்கா, பேராக் மற்றும் சிலாங்கூர் (தலா 4 ), நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் (தலா 2) மற்றும் திரெங்கானு (1) ஆக இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டன.

மேலும் லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 756 பேர் உட்பட 112,379 செயலில் உள்ள தொற்றுக்கள் இருந்தன, அவர்களில் 397 பேருக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது.

அத்தோடு இத்தொற்று நோயிலிருந்து 10,833 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை இப்போது 2,346,303 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here