ஈப்போ: பீடோர் Lubuk Degong நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆர். தர்ஷனின் (20) உடல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) காலை 11 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
நேற்று 20 வயதான தனது பெண் நண்பருடன் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரிடம் ஒரு உயரமான பகுதிக்கு செல்ல விரும்புவதாக கூறினார். பாதிக்கப்பட்டவரின் நண்பர் அவரை பின்தொடர்ந்தார். ஆனால் பாதியிலேயே தங்களின் உடமைகளை கவனிப்பதற்காக திரும்பி வந்ததாகக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தனியாக மேலே சென்றார். இருப்பினும் அவர் திரும்பத் தவறிவிட்டார். பின் உடன் வந்த பெண் அருகிலுள்ள ஒராங் அஸ்லி குடியிருப்பில் இருந்து உதவி கோரியதாக கூறினார். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை வான் அசாருதீன் கூறினார்.