ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 40 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும்,  70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பின்னர், ஐஎஸ்-கரோசன் தீவிரவாத அமைப்புக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, குந்துஸ் பகுதியில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கரோசன் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், கந்தகார் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினர் மசூதி ஒன்றில்  இன்று (15) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் கட்டிடத்திற்குள் நுழைந்து தங்களை வெடிக்கச் செய்வதற்கு முன்பு, அங்கிருந்த காவலர்களை சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புபொறுப்பு ஏற்பதாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here