மெல்போர்ன்: கடந்த சனிக்கிழமையன்று ஆஸ்திரேலிய போலீஸ் மிகப்பெரிய ஹெராயின் கடத்தல் ஒன்றை முறியடித்துள்ளதாக தெரிவித்தது, இதன் மதிப்பு 140 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (431 மில்லியன் வெள்ளி), மற்றும் போதை மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் மலேசியர் ஒருவரையும் கைது செய்தது.
மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பீங்கான் ஓடுகளின் சரக்கு கொள்கலனில் இப்போதைமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. மெல்போர்னில் இருக்கும் ஒரு வணிக நிறுவனத்தின் பெயருக்கு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் அல்லது பொதுமக்களின் நலன் கருதி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை ஆஸ்திரேலிய போலீசார் குறிப்பிடவில்லை.
ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் இந்த வழக்கில் தாங்கள் மலேசிய போலீசாருடன் இணைந்து செயல்படும் என்று ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் கமிஷனர் கமாண்டர் கிறிஸ்ஸி பாரெட் கூறினார்.