702 இலங்கையர்களுக்கு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பா?

இந்தியாவை தளமாகக் கொண்ட ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 702 இலங்கையர்கள் தொடர்பில் அதிர்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ISIS உறுப்பினரின் (Mohamed Samsudeen) வட்ஸ்அப் கணக்கு மூலம் (WhatsApp group) இந்த 702 இலங்கையர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 702 பேரில் ஒரு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போலீசார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here