பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’ புயல்; 375 பேர் பலி!

பிலிப்பைன்ஸில், கடந்த இரண்டு நாட்களாக வீசிய ராய் புயல் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வீசிய காற்று காரணமாக ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இருளில் மூழ்கின. மேலும் அப்பகுதியிலிருந்த நூற்றுக் கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன.

புயல் காரணமாக அங்கு மின் விநியோகம் மூன்றாவது நாளாக தடைபட்டு உள்ளது. தகவல் தொடர்பு சேவையும் முற்றிலும் முடங்கி போய் விட்டது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ‘ராய்’ சூறாவளி தாக்கிய போது மணிக்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

சக்தி வாய்ந்த ராய் புயல் காரணமாக, இதுவரை, 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here