முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சபியான் காலமானார். கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) இரவு 11.45 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவின் மன்சாராவில் உள்ள தனது மகனின் வீட்டில் இறந்தார்.
16ஆவது ஜோகூர் மந்திரி பெசாரும், 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பார்ட்டி பிரிபூமி பெர்சது மலேசியா (பெர்சத்து) முதல்வருமான ஒஸ்மான், அக்டோபரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். 70 வயதான அவர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ப.ன்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒஸ்மானின் உடல் லார்கினில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று இறுதி சடங்குக்காக கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.