சீனாவில் உணவகம் இடிந்து விழுந்ததில் 16 பேர் பலி!

பெய்ஜிங், ஜனவரி 8 :

நேற்று வடக்கு சீனாவில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் 16க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடக அறிக்கையின்படி, ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள சியாங்ஃபென் கவுண்டியில் விருந்துகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மாடி கட்டடம் நேற்றுக் காலை இடிந்து விழுந்தது. இதனால் 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுவரை இடிபாடுகளில் இருந்து தப்பிய 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர், டஜன் கணக்கானவர்களை காணவில்லை, அவர்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என நம்பப்படும். தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மீட்புப் பணியில் 700 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரழிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here