IJN ராயல் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மாமன்னர் இன்று அரண்மனை திரும்பினார்

மாமன்னர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா தேசிய இதயக் கழகத்தின் (IJN) ராயல் வார்டில் இருந்து  குணமடைந்து இன்று இல்லம் திரும்பினார்.  Istana Negara Datuk Pengelola Bijaya Diraja Datuk Indera  அஹ்மட் ஃபாதில் ஷம்சுடின் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் பெர்னாமாவால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடர்பு கொண்டபோது இதை உறுதிப்படுத்தினார்.

சனிக்கிழமை (ஜனவரி 22) முதல் உடல்நலப் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) காலை 11.30 மணிக்கு மாமன்னர் இல்லம் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23), மாமன்னர் IJN இன் ராயல் வார்டில் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக அரண்மனை கூறியது. 2020 செப்டம்பரில் மாமன்னர் முழங்கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் சிகிச்சையின் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக அரண்மனை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here