புக்கிட் மெர்தஜாம், ஜாலான் பாருவில் உள்ள சொகுசு காண்டோமினியத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்றிரவு ஒருவர் பலமுறை சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். பினாங்கு காவல் துறைத் தலைவர் ஷுஹைலி முகமட் ஜைன், இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட, 31 வயதான உள்ளூர் ஆடவர், வாகன நிறுத்துமிடத்தின் மூன்றாவது மாடியில் முகம் குப்புற விழுந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் சுடப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்,என்று ஷுஹைலி இன்று ஒரு அறிக்கையில் கூறினார். சம்பவ இடத்தில் பொலிசார் 12 தோட்டாக் குண்டுகளைக் கண்டுபிடித்ததாகவும், பழிவாங்கும் நோக்கமாக இருக்கும் என்பதை மறுப்பதிற்கில்லை என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர் போலீசாரால் தேடப்படும் பட்டியலில் உள்ளவர் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர். அவர் கடந்த ஐந்து மாதங்களாக சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக ஷுஹைலி கூறினார். உடல் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.