சுகாதார அமைச்சகம் இன்று 22,802 புதிய கோவிட் -19 தொற்றுககளை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3,019,163 ஆக உள்ளது. ஆகஸ்டு 26ஆம் தேதிக்குப் பிறகு, 170 நாட்களில் அதிகப்பட்சமாக இன்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய வழக்குகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும். 20,939 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 11) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (4,291), சபா (3,361), ஜோகூர் (2,860), கெடா (1,623), கிளந்தான் (1,589), பினாங்கு (1,490), நெகிரி செம்பிலான் (1,235), கோலாலம்பூர் (1,095), பகாங் (1,008), மலாக்கா (988), பேராக் (443), தெரெங்கானு (293), சரவாக் (214), புத்ராஜெயா (190), லாபுவான் (132), பெர்லிஸ் (127). ஜோகூர், கிளந்தான் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் தொற்றுகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதில் மிக அதிகமாக உள்ளது.