கோம்பாக், பிப்ரவரி 15 :
இங்குள்ள கம்போங் சாங்காட், டாமாயில் உள்ள ஒரு வீட்டில் ஊனமுற்ற (OKU) ஒருவரது உடல் இன்று சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், தங்களுக்கு காலை 10.04 மணிக்கு, சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது.
தெற்கு கோம்பாக் மற்றும் செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 14 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் வந்தவுடனே, மொட்டை மாடி வீட்டு அறையில் தீப்பற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“அப்போது அந்த இடத்தில் 44 வயதுடைய ஊனமுற்ற ஒருவரின் உடலைக் கண்டு தமது உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர் ,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.