ரஷ்யாவில் விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன

சான் பிரான்சிஸ்கோ, மார்ச் 6 :

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 10 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷ்யா. அதே நேரம் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நிறுவனம் நேற்று கூறியது.

விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.

இதேபோல், உக்ரைன் மீதான ரஷ்ய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு நிறுவனம், விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.

ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷ்ய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here