மலாக்கா, தாமான் கோத்தா லக்சமானாவில் உள்ள ஜாலான் சையத் அப்துல் அஜீஸ் மேம்பாலத்தில் இருந்து இன்று ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். காலை 9.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் டான் சின் சீ 76, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று மலாக்கா காவல்துறை போக்குவரத்துத் தலைவர் சுப்ட் ஹசன் பஸ்ரி யாஹ்யா தெரிவித்தார்.
அவர் தனது Toyota Vios இல் மலாக்கா ராயாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேம்பாலம் சாலையில் இருந்து சுமார் 15 மீட்டர் உயரத்தில் உள்ளது என தொடர்பு கொண்ட போது கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் மலாக்கா தெங்கா நிலையத்தில் இருந்து எட்டு தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை இடிபாடுகளில் இருந்து மீட்க சுமார் 10 நிமிடங்கள் எடுத்தனர்.