வாக்களிக்க வந்த முதியவர், வாக்குச்சாவடியில் திடீரென சரிந்து விழுந்து இறந்தார்; மூவாரில் சம்பவம்

மூவார், மார்ச் 12 :

மூவரில் இன்று காலை வாக்குச்சாவடியில் வாக்காளராக தனது கடமையை நிறைவேற்ற வந்த மூத்த குடிமகன் ஒருவர், உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

78 வயதான அவர் வாக்குச்சாவடிக்கு வந்தபோது திடீரென சரிந்து விழுந்ததாக முவார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜஹாருடின் ரசிப் தெரிவித்தார்.

“சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகளால், பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்த குற்றவியல் கூறும் இல்லை, மேலும் மேல் நடவடிக்கைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜஹாருடின் கூறினார்.

போலீசாரிடமிருந்து உத்தியோகபூர்வ அறிக்கையைப் பெறுவதற்கு முன்னர், எந்தவொரு துக்கங்களையும் விடயங்களையும் பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here