பொழுதுபோக்கு மையத்தில் எஸ்ஓபியை மீறியதாக 52 வெளிநாட்டவர்கள் கைது; 30 உள்ளூர்வாசிகளுக்கு அபராதம்..!

கோலாலம்பூர், மார்ச் 18 :

தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் கட்டம் 4 இன் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக, ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில், மொத்தம் 52 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவசிக்கையின் பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

இந்த சோதனையில் 52 வெளிநாட்டினரில் 19 முதல் 49 வயதுடைய 27 ஆண்களும் 25 பெண்களும் மற்றும் 30 உள்ளூர்வாசிகள், அதாவது 9 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் உட்பட மொத்தம் 82 பேர் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“அனைத்து உள்ளூர் வாசிகளுக்கு தலா RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் 52 வெளிநாட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, நோய்த்தொற்றுக்கான உள்ளூர் பகுதிகளில் தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (நடவடிக்கைகள்) VAT 2021 மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) ஆகியவற்றின் விதிமுறை 17 (1) இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

“தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) அமைத்துள்ள SOP களை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக VAT 4 ஆம் கட்டத்தின் கீழ் கிளப் நடவடிக்கைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here