பேராக்கில் RM4.5 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; எண்மர் கைது

ஈப்போ, மார்ச் 25 :

பேராக் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (மார்ச் 21) நடத்திய தொடர் சோதனையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் எட்டு உள்ளூர் ஆட்களை போலீசார் கைது செய்தத்துடன் அவர்களிடமிருந்து , RM4.5 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில், 32 முதல் 37 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் காலை 11.10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட 8 சோதனைகளில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

“இந்தச் சோதனையில், 620,025 போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயல் முறை, கிழக்குக் கடற்கரையிலிருந்து பேராக்கில் விநியோகிக்கப்படும் போதை மருந்துப் பொருட்களைக் கொண்டுவருவதாக மியோர் ஃபரிடலாத்ராஷ் கூறினார்.

மேலும் RM212,712 மதிப்புள்ள ரொக்கம், நகைகள் மற்றும் ஐந்து வாகனங்கள் போன்ற கடத்தல் கும்பலுக்கு சொந்தமான சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக பதிலைப் பெற்றதாகவும், அவர்களில் ஐந்து பேருக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தண்டனைகள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் மார்ச் 28 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here