சிரம்பானில் நான்கு நாட்களுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்படும் ஒருவரின் சடலம் இங்கு அருகே உள்ள ஜாலான் தோக் உங்குவில் உள்ள வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இரவு சந்தைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பொது மக்களில் ஒருவர் சடலத்தை பார்த்ததாக சிரம்பான் OCPD ACP நந்தா மரோஃப் தெரிவித்தார். அந்த நபர் பிரதான சாலையில் நடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசியதால் அதைச் சரிபார்க்க முடிவு செய்தார்.
பின்னர் அவர் SMK புக்கிட் மேவாவுக்கு அடுத்துள்ள நான்கு அடி ஆழமுள்ள வடிகாலில் அந்த மனிதனின் எச்சங்களைக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர் காலர் சட்டையில் “பாதுகாப்பு” என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக இருந்ததாகவும் ஏசிபி நந்தா கூறினார். அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்காக ஆடவரின் உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.