RM132 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, ஒரு நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

கோலாலம்பூர், மார்ச் 29 :

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) நாட்டில் உள்ள ஒரு வாகனம் தொடர்பான நிறுவனம் சம்பந்தப்பட்ட RM132 மில்லியன் திட்டம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, மற்றொரு நபரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

ஆதாரங்களின்படி, ஒரு நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக உள்ள சந்தேக நபர், தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்கு திட்ட மானியம் பெறுவதற்கு பதிலாக, 5 மில்லியன் வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

36 வயதான சந்தேகநபரை, இன்று முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி ஷா வைரா அப்துல் ஹலிம், நீதவான் நீதிமன்றில் உத்தரவிட்டார்.

முன்னதாக, இதே வழக்கில் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த டத்தோ பட்டம் கொண்ட மற்றொரு சந்தேக நபரின் தடுப்புக் காவலை நாளை முதல் ஏப்ரல் 2 வரை நீட்டிக்கவும்SPRM-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறினார்.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர், டத்தோ டான் காங் சாயை தொடர்பு கொண்டபோது, ​​அவர் மேற்குறித்த சந்தேக நபர்கள் கைது மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை உறுதிசெய்தார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 17 (ஏ) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த வியாழன் அன்று, ஒரு வாகனம் தொடர்பான நிறுவனம் சம்பந்தப்பட்ட RM85 மில்லியன் மதிப்பிலான திட்டம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு டத்தோ உட்பட ஒன்பது நபர்கள் தடுப்புக்காவல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here