விமானம் தரையிறங்கும்போது சறுக்கியதில் பயிற்சி விமானி காயம்

லங்காவி, மார்ச் 31 :

லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறங்கும் போது, ​​ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததில், ஒரு பெண் பயிற்சி விமானி லேசான காயம் அடைந்தார்.

கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடன் கூறுகையில், இரவு 8.15 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து, லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

“இந்தச் சம்பவத்தில் டயமண்ட்-14 வணிகப் பயிற்சி விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்தது மற்றும் 28 வயதான பெண் பயிற்சி விமானிக்கு இரு கால்களிலும் இடுப்பு மற்றும் முழங்கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் தீயணைப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரியை தொடர்பு கொண்டபோது, அவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here