தாமான் மெலாவத்தியில் நிலச்சரிவு இல்லை – சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக மண் நகர்வு மட்டுமே

ஜாலான் கோலம் ஆயர், கம்போங் வாரிசான், தாமான் மெலாவத்தி கிள்ளான் கேட்ஸ் அணைக்கு செல்லும் சாலை சீரமைப்புப் பணியின் காரணமாக நேற்று மாலை மண் நகர்வு சம்பவம் நடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபரூக் எஷாக் தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்துடன் (எம்பிஏஜே) நடத்திய விசாரணையில், ஒரு தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் தங்கியிருந்த வீடு ஒன்றும் சேதமடையவில்லை என்றும், கட்டுமான குப்பைகள் மற்றும் மண் மட்டுமே வீட்டின் கொல்லைப்புறத்தை பாதித்துள்ளது என்றும் அவர் கூறினார். எம்பிஏஜே பொறியாளர் நிலச்சரிவு ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ, சொத்துக்களுக்குச் சேதமோ ஏற்படவில்லை என்று அவர் பெர்னாமாவிடம் இன்று கூறினார்.

நேற்று (மார்ச் 30) ​​மாலை 6.25 மணியளவில் ஏற்பட்ட கனமழையால், வீட்டின் பின்புறம் உள்ள கட்டுமான குப்பைகள் மற்றும் மண் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சம்பவம் குறித்து தம்பதியினரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் கூறுகையில், தங்கள் குழந்தைகள் வேலையில் இருந்தபோது கணவன் மற்றும் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தனர்.

வீட்டில் வசிப்பவர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியதாகவும், தம்பதியினர் அவ்வாறு செய்ய ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்தினர் தங்கள் உறவினர் வீட்டில் தங்க ஒப்புக் கொண்டதாகவும் முகமட் பாரூக் கூறினார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் மலைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளின்  சீரற்ற வானிலை குறித்து எப்போதும் கவனமாக இருக்கவும் கனமழையால் ஏற்படும் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here