புடுவிலுள்ள ஜாலான் பசாரில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு வெளிநாட்டு பெண்கள் கைது

கோலாலம்பூர், மார்ச் 31 :

கடந்த சனிக்கிழமையன்று, புடுவிலுள்ள ஜாலான் பசார் என்ற இடத்தில் மூத்த குடிமகன் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு பொறாமையே காரணம் என நம்பப்படுகிறதுடன் இவ்வழக்கு தொடர்பில்  இரு வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா இதுபற்றிக் கூறுகையில், கோலாலம்பூர் மருத்துவமனையின் ஊழியர்களிடமிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரவு 11.55 மணியளவில் 70 வயது முதியவர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

“முதற்கட்ட பரிசோதனையில், அந்த நபருக்கு முகம் மற்றும் மார்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்து, மேல் சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

“இருப்பினும், அந்த நபர் நேற்று நண்பகல் 2.55 மணியளவில் இறந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், ஜாலான் பசார் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தின் நடைபாதையில் அவர் மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டதாக சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது,” என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, நேற்று இரவு 3.45 மணி முதல் 8.43 மணி வரை நடத்திய சோதனையில் முறையே 45 மற்றும் 49 வயதுடைய இரண்டு வெளிநாட்டுப் பெண்களை கைது செய்ததாக நூர் டெல்ஹான் கூறினார்.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, சந்தேகநபர்கள் இருவரும் இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“சட்டத்தை மீறும் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 03-26002222 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-21159999 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here