முகநூலில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் மோட்டார் சைக்கிளில் நடனம் ஆடிய நபரை போலீசார் தேடுகின்றனர்

போர்ட்டிக்சன், ஏப்ரல் 4 :

மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யும் போது, கையை விடுவித்து நடனமாடும் செயலைக் காட்டும் ஒரு காணொளி தொடர்பில், காணொளியில் சவாரி செய்பவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஸ்பிரிங்ஹில்லுக்கு வெளியேறும் முன் சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் 16 ஆவது கிலோமீட்டர் முதல் 17 ஆவது கிலோமீட்டர் வரை இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முகமட் இதுபற்றிக் கூறுகையில், முகநூலில் 39 வினாடி கொண்ட காணொளிப் பதிவு மூலம் இந்த சம்பவத்தை நாம் கண்டுபிடித்தோம்.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (BSPT) மேலும் சோதனை செய்த பின்னர், இது கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று goodymy_official என்ற கணக்கின் உரிமையாளரின் டிக்டோக் பயன்பாட்டைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்யப்பட்டதைக் கண்டறிந்தது.

“பின்னர் வீடியோ நேற்று FB இல் பரவியது,” என்று அவர்நேற்று பிற்பகல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் BSPT IPD போர்ட்டிக்சனுக்கு தகவல் தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“பதிவில் அடையாளம் காணப்பட்ட நபர்களை உடனடியாக சரணடையுமாறு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது, மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 42 (1) மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 336 இன் படி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here