அதிகாலை தனியாக வந்த மோட்டார் சைக்கிளோட்டியிடம் கொள்ளையிட்ட கும்பல்

ஷா ஆலம், பெர்சியாரான் செத்தியா டாகாங் யு13, செத்தியா ஆலத்தில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்ட நபர் அதிகாலை 4.30 மணியளவில் தனியாக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தபோது, குறைந்தது ஏழு பைக்கர்களைக் கொண்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டார்.

ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி இக்பால் இப்ராகிம், கொள்ளையர்கள் பலமுறை பாதிக்கப்பட்டவரை ஹெல்மெட்டால் தாக்கி இருக்கின்றனர். கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் செல்வதற்கு முன், அவரது பணப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி  அவர் சார்பாக காவல்துறை புகார் அளித்ததாக அவர் கூறினார். புலனாய்வாளர்கள் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து வருவதாகவும், கொள்ளைக்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இக்பால் கூறினார். இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் ஷா ஆலம் சிஐடி இன் இன்ஸ்பெக்டர் Saiedayu 03-55202222 என்ற எண்ணில் அழைக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here