கோத்தா பாரு, ஏப்ரல் 11 :
கடந்த வியாழன் அன்று, இங்குள்ள ஜாலான் பாசீர் பூத்தே – குபாங் கெரியானில் உள்ள ஒரு வீட்டில் 2.5 லிட்டர் கெத்தும் தண்ணீரை வைத்திருந்ததாக, லான்ஸ் கார்போரல் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ்காரர் மற்றும் நான்கு நண்பர்கள் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், வான் முஹமட் அலிஃப் வான் யூசுப், 20; முஹமட் ஃபரிஸ் ஐசத் ருஸ்லான், 23; அனீஸ் நாஜியெஹா முஹமட் அங்கெலான், 27; பிதா நாபி மற்றும் போலீஸ்காரரான ராஜா ரோஜாலியா ஃபாடிலா ராஜா மாமட், 30, ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் முகமட் இஸ்தாம் சே அனி முன் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை மாறாக விசாரணைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
முதல் குற்றச்சாட்டின்படி, கடந்த வியாழன் அதிகாலை 3.25 மணியளவில், இங்குள்ள ஜாலான் பாசீர் பூத்தே-குபாங் கெரியானில் உள்ள ஒரு வீட்டில் 1.5 லிட்டர் மைட்ராஜினைன் (கெத்தும்) திரவத்தை வைத்திருந்ததாக அனைவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே இடத்தில் மற்றும் ஒரே நேரத்தில் 1 லிட்டர் மைட்ராஜினைன் விஷ திரவத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30 (5) இன் கீழ் குற்றங்களைச் செய்தார்கள் என்றும் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM10,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அரசு தரப்பு வழக்கறிஞர் நர்ஸ்யாபிகா முகமட் அவர்களால் இவ் வழக்குத் தொடரப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் சார்பாக தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) இன்டான் நோர் நாதிரா இஸ்மாயிலின் வழக்கறிஞர் ஆஜராகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் நீதிமன்றம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா RM4,500 ஜாமீன் நிர்ணயித்ததுடன் ஜூன் 13 ஆம் தேதியை வழக்கின் மறு தேதியாக குறிப்பிட்டது.







