ஜெலேபு, ஏப்ரல் 17 :
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ஜெலேபு சிறையில் இருந்து தப்பிச் சென்ற ஏழு கைதிகளில் 6 பேர் மீது நாளை பாகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று ஜெலேபு மாவட்ட காவல்துறை தலைமை துணை கண்காணிப்பாளர் மஸ்லாம் உடின் கூறினார்.
28 முதல் 62 வயதுக்குட்பட்ட அனைத்து கைதிகள் மீதும் குற்றவியல் சட்டத்தின் 224 வது பிரிவின் படி குற்றம் சாட்டப்படும் மேலும் தலைமறைவாக உள்ள முகமட் சயபிக் ரோமத் (32) என்ற மற்றொரு கைதி போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் என்றார்.
தேடப்பட்டு வரும் முகமட் சயாபிக் தவிர, மற்ற ஆறு கைதிகள் சோஹைமி காலிட், 50; மஸ்லான் சமா, 39; முகமட் அமினுடின் கான் முகமட் யூசோப், 28; ஷாசுவான் முகமட் ஷெரீப், 32; முகமட் ஜைரிசான் ஜைனால், 42 மற்றும் வெளிநாட்டவரான ஜைனுதீன், 62 ஆகியோரே தடுப்புக்காவலில் இருந்து தப்பி ஓடியவர்களாவர்.
இருப்பினும், ஏழு கைதிகளில் ஆறு பேர் வெவ்வேறு இடங்களில் மற்றும் தேதிகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஜெலேபு சிறையின் தடுப்புக்காவலில் இருந்த ஏழு கைதிகள் ஏப்ரல் 10 ஆம் தேதி தப்பிச் சென்றதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.