ஜெரான்டுட் மொத்த விற்பனை சந்தைக்கு அருகிலுள்ள நான்கு உணவுக் கடைகள் தீயில் எரிந்து நாசம்

ஜெரான்டுட், ஏப்ரல் 27 :

ஜெரான்டுட் மொத்த விற்பனை சந்தைக்கு அருகிலுள்ள ஜாலான் ஜெரான்டுட்-தெமெர்லோவில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு உணவுக் கடைகள் தீயில் எரிந்து நாசமானது.

காலை 11.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கேக் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் விற்கும் கடைத் தொகுதியில் இருந்த ஆறு கடைகளில் நான்கு கடைகளில் தீப்பிடித்ததில், மற்ற இரண்டு கடைகள் பாதுகாப்பாக இருந்தன.

ஜெரான்டுட் தீயணைப்புத் துறையின் துணை கண்காணிப்பாளர், முகமட் சுல்கிப்லி முகமட் இதுபற்றிக் கூறுகையில், இங்குள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களுக்கு காலை 11.48 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் ஜைனால் கூறினார்.

“நண்பகல் 1.10 மணி வரை தீயை அணைக்கும் பணி நடந்ததாக அவர் கூறினார்.

“இந்தச் சம்பவத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன, “என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here