கோலாலம்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு : மெட் மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 2.40 மணியளவில் துறையினரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாக்கா மற்றும் லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டாட்சிப் பகுதிகள் மட்டும் பாதிக்கப்படாது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய வட மாநிலங்களுக்கு, அனைத்து நகரங்களும் மோசமான வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here