5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து: 2 பேர் பலி

சிரம்பான், ஜாலான் பெசார் பலோங் 4, ஜெமாஸ் வழியாக ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில், அவர்கள் பயணித்த டொயோட்டா அவான்சா பல்நோக்கு வாகனம் (MPV) விபத்துக்குள்ளானதில் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இரவு 11.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஃபெல்டா பலோங்கைச் சேர்ந்த முகமது அசார்ருதீன் 34, மற்றும் நோர் ரோஹைனி 62, ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர்  ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

மேலும் ஐந்து பேர் தலை, வயிறு மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், மற்ற மூன்று பேர் காயமின்றி தப்பியதாகவும் அவர் கூறினார்.

இரண்டு பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஜெம்போல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் ஹூ மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here