கேமாமன், மே 11 :
சுக்காய், தாமான் சமுதேரா தைமூர் என்ற இடத்தில், தனது 18 மாத குழந்தை 30 நிமிடங்களுக்கு காருக்குள் சிக்கியதால், அதன் தாயார் மிகவும் கவலையான தருணங்களை எதிர்கொண்டார்.
இன்று காலை 9.30 மணியளவில், குழந்தையுடன் காரில் வந்த பெண் சலவை கடைக்கு வெளியே சென்றபோது, அவர் ஓட்டிச் சென்ற புரோத்தோன் சத்ரியா கார் தானாக பூட்டிக்கொண்டதால், இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
சுக்காய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஜைலானி அப்துல்லா கூறுகையில், தமது துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, குழந்தை அழுது கொண்டிருந்தது என்றும் அது பயந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
“தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கதவைத் திறக்க சுமார் 10 நிமிடங்கள் எடுத்தனர், மேலும் குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் ” அவர் கூறினார்.
இது தொடர்பான அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, குழந்தைகளை தனியாக வாகனத்தில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று ஜைலானி பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.