1948 ஆம் ஆண்டு தோமஸ் கோப்பை தொடங்கப்பட்டத்தில் இருந்து, இந்தியா தனது முதல் தோமஸ் கோப்பை பட்டத்தை வென்று இன்று சரித்திரம் படைத்தது. உலகின் 11ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, உலகின் 8ம் நிலை வீரரான ஜொனாடன் கிறிஸ்டிக்கு எதிரான தீர்க்கமான ஆட்டத்தில் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு வெற்றிப் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.
முன்னதாக, இன்று பாங்காக்கில் உள்ள இம்பாக்ட் அரங்கில் நடைபெற்ற 2022 தோமஸ் கோப்பையின் இறுதி கட்டத்தில் லக்ஷயா சென் இந்தியாவுக்கு நம்பிக்கையான தொடக்கத்தைக் கொடுத்தார். உலகின் 9 ஆம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஃபேவரிட் அந்தோனி சினிசுகா ஜின்டிங்கை முதல் ஒற்றையர் ஆட்டத்தில் 8-21, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்தார்.