பாடாங் பெசார், மே 19 :
சமீப காலமாக கெத்தும் இலைகள் கடத்தல் நடவடிக்கைகளுக்கான ‘பரபரப்பான’ பகுதியாக வாங் கெலியான் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று, இங்குள்ள கம்போங் வாங் கெலியானில் உள்ள ரப்பர் தோட்டத்தில் RM30,450 மதிப்புடைய, ஒரு மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கெத்தும் இலைகள் பொது நடவடிக்கைப் படை (PGA) யினரால் கண்டெடுக்கப்பட்டது.
பி.ஜி.ஏ புலனாய்வுக் குழு பிற்பகல் 3 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கெத்தும் இலைப் பொதிகளின் குவியலைக் கண்டுபிடித்தது.
பட்டாலியன் 18 PGA இன் கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர் ராம்லி வான் சாலின் கூறுகையில், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாராவது அங்கிருந்த கெத்தும் இலைகளை எடுக்க வந்தார்களா என்று முதலில் கண்காணிக்கப்பட்டது.
“தனிநபர் யாரும் வராததால், நாங்கள் கெத்தும் இலைகளை பறிமுதல் செய்தோம். பார்த்த இலைகள் இன்னும் புதியதாக இருப்பதால், அதே நாளில் கெத்தும் அங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கெத்தும் இலைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து “தாய்லந்து நாட்டின் எல்லைக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது, தாய்லாந்தில் இருந்து கடத்தல்காரர்கள் இங்கு வந்து கெத்தும் இலைகளை உள்ளே கொண்டு செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
“வழக்கமாக, அவர்கள் (கடத்தல்காரர்கள்) எலி பாதைகளைப் பயன்படுத்தி அண்டை நாடுகளுக்கு கொண்டு செல்ல சாக்குகளைப் பயன்படுத்தி இலைகளை எடுத்துச் செல்வார்கள்,” என்று அவர் இன்று PB11 இல் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பாடாங் பெசார் தவிர, தனது துறை எப்போதும் கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய இடமான வாங் கேலியான் மீது கவனம் செலுத்துகிறது என்று ராம்லி மேலும் கூறினார்.
“இவ்வழக்கு விஷம் சட்டம் 1952 பிரிவு 30 (3) இன் கீழ் விசாரிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.