ஜகார்த்தா, மே 20 :
உலகின் மிகப்பெரியளவில் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடான இந்தோனேசியா, தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பாமாயிலுக்கான ஏற்றுமதிக்கு வரும் மே 23ஆம் தேதியிலிருந்து தடை விலக்கப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.
பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீங்கியதை தொடர்ந்து, அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது.