ஷா ஆலமில் உள்ள ஐ-சிட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹரிராயா நிகழ்ச்சியில் திருநங்கைகள் குழு அரை நிர்வாண நடனமாடி பட்டாசு வெடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமட், சனிக்கிழமையன்று அந்த இடத்தின் கூட்டு நிர்வாகக் குழுவின் புகாரினை தொடர்ந்து, திங்களன்று “Cik Lala” என்று அழைக்கப்படும் பிரபலமான இன்ஸ்டாகிராம் அமைப்பாளர் உட்பட பல நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நடனம் ஆடியவர்களில் சிலர் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் நேற்று இரவு செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஹரிராயா நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.