மனைவி மற்றும் குழந்தையுடன் பயணித்த போதைப்பொருள் வியாபாரி என சந்தேக நபரின் காரை போலீசார் சுட்டு நிறுத்தினர்

ஈப்போ: லுமுட்டின் அயர் தவாரில்  நடந்த ஒரு சம்பவத்தின் போது சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வியாபாரி ஓட்டிச் சென்ற காரை நிறுத்த போலீசார் ஆறு முறை சுட்டனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹித் கூறுகையில், மாலை 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 61 வயதுடைய சந்தேக நபரின் காரை காவல்துறை ரோந்துப் பிரிவு துரத்தி சென்றது. சந்தேக நபர் தப்பிக்க முயன்றார் மற்றும் போலீஸ் வாகனத்தின் முன் மோதினார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரின் காரை போலீசார் 800 மீட்டர் வரை துரத்திச் சென்றதாகவும், அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க காரின் மீது ஆறு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இறுதியாக அந்த நபரைக் கைது செய்ததாகவும், அவரது காரில் 62.5 கிராம் எடையுள்ள 33 பாக்கெட் சியாபுக்களைக் கண்டுபிடித்ததாகவும் மியோர் கூறினார்.

காரில் இருந்த சந்தேக நபரின் 38 வயது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதியரின் இரண்டு வயது மகன்  உடனிருந்தார். இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 307 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here