செராஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் டொயோட்டா அல்பார்ட் எம்பிவி காரில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினரால் அழைக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் அடங்குவர் என்று செராஸ் OCPD உதவி ஆணையர் முகமது இட்ஸாம் ஜாபர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) செராஸ் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், “இதுவரை, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக ஏசிபி முகமது இட்ஸாம் கூறினார். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டடுள்ளது. ஆனால் மாதிரிகள் மேலும் பகுப்பாய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மே 29 அன்று, பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் காருக்குள் 19 வயதுடைய ஆண் மற்றும் பெண் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருந்த பொதுமக்கள் சடலங்களை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண் பின் இருக்கையில் இருந்த நிலையில் முன் இருக்கையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பதற்கு முன்னர், இரண்டு வாலிபர்களும் காணாமல் போனதாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்தனர்.