ஈப்போ: பாகன் டத்தோ, ஊத்தாங் மெலிந்தாங்கில் பாமாயில் ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.
பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மேலும் அவரது உடலை மீட்டெடுக்க நாங்கள் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
காரில் மேலும் நான்கு பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. லோரி டிரைவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.