ஜார்ஜ் டவுன், ஜூன் 18 :
அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்திற்கும் தரைத்தளத்திற்கும் இடையே உள்ள லிஃப்டில், தனது இரு கால்களும் சிக்கிக் கொண்டதால், முதியவர் ஒருவர் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மிக கவலையான தருணங்களை சந்தித்தார்.
சனிக்கிழமை (ஜூன் 18) அதிகாலை பினாங், சுங்கை பினாங்கில் உள்ள தேசா பினாங் II அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக அறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை பாதுகாப்பாக மீட்டனர். பாதிக்கப்பட்டவர் இப்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சாடன் மொக்தாரை தொடர்பு கொண்டபோது, பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இதுதொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.