சாலை சந்திப்பில் கார் மீது சூப்பர் பைக் மோதியதில் தம்பதியர் பலி

கோல  தெரெங்கானுவில் உள்ள சந்திப்பில், அதிவேக மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், சூப்பர் பைக் கூட்டத்தை முடித்துவிட்டு திரும்பிய கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

அப்திகா ரஸாலி 36, மற்றும் அவரது மனைவி, ரபியதுலதாவியா சவுஃபி 36, ஆகியோர் தங்களது ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 மோட்டார் சைக்கிளில் தெரெங்கானுவில் உள்ள கெமாமனில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஒரு சந்திப்பிலிருந்து வெளியேறிய கார் மீது அவர்கள் மோதியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டத்தின் மேலாளராக இருக்கும் சீன நாட்டவர் காரை ஓட்டியதாக டுங்குன் மாவட்ட காவல்துறை தலைவர் பஹாருடீன் அப்துல்லா தெரிவித்தார்.

ரசாலியும் அவரது மனைவியும் கார் மீது மோதி தரையில் வீசப்பட்டதில் உள் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மாராங்கில் உள்ள ஒரு திட்டப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று பஹாருடீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here