ரவூப், ஜூன் 28 :
ஜாலான் ரவூப்-லிப்பிஸ் என்ற இடத்தில் இன்று இரண்டு வாகனங்கள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறுகையில், காலை 6.10 மணியளவில் விபத்தில் இறந்தவர் இங்குள்ள ஜாலான் துன் ரசாக்கைச் சேர்ந்த டான் ஆங் சுவான், 83, என்று அடையாளம் காணப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் டிரெய்லருடன் புரோட்டான் சாகா கார் மோதியதாக அவர் கூறினார்.
“புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவரை மீட்புப் படையினர் பவர் யூனிட்டைப் பயன்படுத்தி, வெளியே அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“காயமடைந்த பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், இறந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சுல்ஃபாட்லியின் கூற்றுப்படி, மீட்பு நடவடிக்கையில் ஒரு அதிகாரி உட்பட ரவூப் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர் ஈடுபட்டனர்.