தோற்றவர்களின் சத்தத்தை கண்டு கொள்ளாமல் கட்சி முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள்; ரஃபிஸி வலியுறுத்தல்

பிகேஆரின் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி, சமீபத்திய கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் எழுப்பிய “சத்தத்தை” புறக்கணிக்குமாறு கட்சியை வலியுறுத்தியுள்ளார்.

தோல்வியடைந்தவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு பதிலாக, மீண்டும் தேர்தல் அல்லது தடயவியல் தணிக்கைக்கு அழைப்பு விடுக்குமாறு கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய ரஃபிஸி, அதற்கு பதிலாக கட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

கட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள், தனது வெற்றி சூழ்ச்சியால்தான் என்ற கருத்தை உருவாக்க விரும்புவதாக ரஃபிஸி கூறினார். பெரும்பான்மையான பிகேஆர் உறுப்பினர்கள் முடிவுகளை ஏற்றுக்கொண்டனர் என்றார்.

துணை தலைவராக நான் எடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில், தடயவியல் தணிக்கை செயல்முறை முழுவதையும் ஆராய்வது. புதிய அணி பொறுப்பேற்பதை தாமதப்படுத்தும் முயற்சியில் கட்சித் தேர்தல்களை தொடர்ந்து கேள்வி எழுப்பி கட்சியை நாசப்படுத்த சதி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்வேன் என்று அவர் மேலும் கூறினார்.

தோல்வியடைந்தவர்கள், குறிப்பாக அன்வாரின் முன்னாள் உதவியாளர் ஃபர்ஹாஷ் வஃபா சல்வடார் ரிசல் முபாரக், கட்சியின் வரவிருக்கும் தேசிய காங்கிரஸில் சான்றிதழ் பெறுவதைத் தடுப்பதற்காக தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலை (GE15) விரைவில் வரவிருப்பதைக் கருத்தில் கொண்டு தேசிய காங்கிரஸை இனி ஒத்திவைக்கக்கூடாது என்று கூறிய ரஃபிஸி, துணைத் தலைவர் என்ற முறையில் தேர்தலைச் சந்திக்க கட்சியின் தலைமையையும் தேர்தல் இயந்திரத்தையும் தயார் செய்வதே தனது முன்னுரிமை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here