சுங்கை சிப்புட், ஜூலை 10 :
இங்குள்ள கந்தான் அருகே ஜாலான் ஈப்போ-கோலா கங்சார் என்ற இடத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்து குறித்து இரவு 8.08 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், சுங்கை சிப்புட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
விபத்தில் சிக்கிய புரோத்தோன் சத்ரியா கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி கவிழ்ந்து விழுந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
“ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர், அதாவது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர்.
“காரினுள் சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் வெளியே மீட்டனர், இறந்தவராது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.