மனைவியை தேடி சென்று அவர் கிடைக்காததால் வெறித்தனமான நடந்து கொண்ட ஆடவர் கைது

மனைவியைத் தேடி சென்றபோது வெறித்தனமாக நடந்து கொண்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக உதுசான் மலேசியா தெரிவிக்கின்றன.

அந்த நபர் நேற்று கெடாவில் உள்ள சுங்கைப்பட்டாணியில் ஒரு ஒரு வீட்டிற்கு தீ வைத்ததோடு காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார். 54 வயதான சந்தேக நபர் பராங் ஆயுதம் வைத்திருந்ததாக கோலா முடா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.

வேலையில்லாத மனிதன் தனது மனைவியைத் தேடுவதற்காக காலை சந்தைக்குச் சென்றபோதும் அவளைக் கண்டுபிடிக்கத் தவறியபோது அவரின் கோபம் வெளிப்பட்டது. பின்னர் அந்த நபர் வெறித்தனமாக சென்று உணவகத்திற்கு அருகில் உள்ள வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்நோக்கு வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். ஜைடியின் கூற்றுப்படி, சந்தேக நபர் கைது செய்யப்படுவதை எதிர்க்கவில்லை. மேலும் விசாரணையாளர்களிடம் அவர் வீட்டில் உள்ள பிரச்சினைகளில் தனது அமைதியை இழந்ததாக கூறினார்.

சந்தேக நபரிடம் போதைப்பொருள் குற்றங்கள் உட்பட 8 குற்றப் பதிவுகள் இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here