சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் – 400 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஜூலை 12:

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இந்த மோதலின் போது 58 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here