பாசீர் கூடாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவரை தாக்கி கொள்ளையடித்த 5 பேர் சுமார் 14 மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். 20 முதல் 32 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று மாலை 6.07 மணியளவில் பாசீர் கூடாங்கில் கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ச முகமட் சுஹைமி இஷாக் தெரிவித்தார்.
23 வயதான குடியிருப்பாளர் மாலை 4.05 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குழு அவரை வழிமறித்து நிராயுதபாணியான அவரை அடித்து அவரது தனிப்பட்ட உடைமைகளைப் பறித்துச் சென்றனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் உதடுகள் மற்றும் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, அவரது கைபேசி, பணப்பை மற்றும் S$460 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சந்தேக நபர்கள் ஜூலை 17 வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மொஹமட் சொஹைமி தெரிவித்தார்.