மீண்டும் தீப்பிடித்த கரோக்கி மையம் – இம்முறை உயிர்ச்சேதம் எதுவுமில்லை

அலோர் ஸ்டார், ஜூலை 17 :

இங்குள்ள மெர்காங், ஜாலான் புத்ராவில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தில் மூன்று உயிர்களைக் காவு கொண்ட கரோக்கி மையம், இன்று காலை மீண்டும் தீப்பிடித்தது. ஆனால் இம்முறை அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர், மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் I, முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பில் ஜேபிபிஎம்முக்கு காலை 10.18 மணிக்கு 999 அவசர லைன் மூலம் அறிக்கை கிடைத்தது.

“அறிக்கையைப் பெற்றவுடன், மொத்தம் 25 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பல இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விரைவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது மற்றும் கரோக்கி மையம் 70 சதவீதம் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டது.

“முதற்கட்ட ஆய்வில் யாரும் வளாகத்தில் சிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. அப்படியிருந்தும், சீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது, ”என்று அவர் இன்று இங்கு கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 10.19 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, மூவர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here