வாழ்க்கைச் செலவின  அதிகரிப்பு தொடர்பான போராட்டம் நாளை திட்டமிட்டப்படி தொடரும்

வாழ்க்கைச் செலவின  அதிகரிப்பு தொடர்பான போராட்டம் சட்டவிரோதமானது என்று நகர காவல்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதன் ஏற்பாட்டாளர்கள் துருன் மலேசியா ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி  நாளை தொடரும் என்று கூறியுள்ளனர்.

எப்ஃஎம்டியின் அறிக்கையின்படி, யுனிவர்சிட்டி மலாயா மாணவர் சங்கத் தலைவர் ஓய் குவோ ஷென் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், பொதுமக்கள் “தைரியமாக இருக்க வேண்டும்” மற்றும் அவர்களின் விரக்தியை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்று கூறினார். காவல்துறைக்கு நோட்டீஸ் வழங்கப்படாவிட்டாலும், நாங்கள் தொடர்வோம் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

முன்னதாக, கோலாலம்பூரில் உள்ள சோகோ வணிக வளாகத்திற்கு வெளியே நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here