16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைதான 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிப்பு

ஈப்போ, ஜூலை 24 :

கடந்த திங்கட்கிழமை 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேர், மேலும் 4 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறுகையில், குற்றவியல் சட்டத்தின் 376-வது பிரிவின்படி அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக ஜூலை 25 முதல் 28 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்ட அனைவரையும் இன்று காலை விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டது. விசாரணை ஆவணங்கள் நாளை திங்கள்கிழமை துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்படும், குற்றச்சாட்டுகள் இருந்தால் இந்த செவ்வாய்கிழமை அவர்கள் மீது சுமத்தப்படும்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்ட பின்னர், அதனுடன் சம்பந்தப்பட்ட பதினமவயது வாலிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here