ஜோகூரில் உள்ள EDL நெடுஞ்சாலையில் இன்று காலை நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் பிஎம்டபிள்யூ கார் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். மற்ற வாகனங்கள் இரண்டு கார்கள் மற்றும் ஒரு வேன்.
பெரித்தா ஹரியான் அறிக்கையின்படி, பிஎம்டபிள்யூ 90% எரிந்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் சுஹைமி ஜமால் தெரிவித்தார். அதன் ஓட்டுநர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.
வேன் மற்றும் மற்றொரு காரும் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் கார் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பிய நிலையில், வேன் ஓட்டுநரின் நிலை குறித்து தெரியவில்லை.